சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துக்களை வழங்கும் மற்றுமொரு கட்டம் இன்று இடம்பெறுகிறது. ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி தலைமையில் தங்கல்ல நகர சபை மண்டபத்தில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறும்.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதிதாக 6 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமே இன்றைய தினம் இடம்பெறுகிறது. இதற்கமைய மாவட்ட மட்டத்தில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் எஞ்சியோருக்கு சமுர்த்தி உரித்துக்களை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.