ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் பங்கேற்கின்றார்.
விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் குழுவின் தலைவர் சமந்த அமரசிங்ஹ தெரிவித்தார்.