எசல முழு நோண்மதி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள விகாரைகளில் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெறுகின்றன.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு ஒவ்வொரு போயா தினங்களிலும் ஒளிபரப்பும் நேரடி சவனக்ரெஸ் நிகழ்ச்சி இம்முறை கதிர்காமம் கிரிவெஹர விகாரையிலிருந்து ஒளிபரப்பப்படுகின்றது. இவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கோபவக்க தம்மிந்த தேரர் பிரதான தர்ம போதனைகளை நடத்தினார்.
ஐரிஎன் எப்எம் சாசனா லோக்க நிகழ்ச்சி இம்முறை கதிர்காமம் கிரிவெகர விகாரையிலிருந்து ஒலிபரப்படுகின்றது. பௌத்த மதத்திற்காக தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களும் இந்நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர்.