இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ள பகுதியளவிலான சந்திரகிரகணத்தை இலங்கையர்கள் காணமுடியும். அதற்கமைவாக இவ்வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் நாளை அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உடுக்கல் மற்றும் விண்வெளிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
நாளை அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் 3 மணியளவில் பூரணமாக காணப்படும். பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் சந்திரகிரகணம் நிறைவுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறானதொரு சந்திரகிரகணம் எதிர்வரும் 2021ம் ஆண்டு மே மாதமே ஏற்படுமென பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றில் குறித்த பகுதியளவிலான சந்திரகிரகணத்தை காணமுடியுமென பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.