கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறுவதுடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.