அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடி ஆகியவற்றை ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய, கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.