என்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் 27ம் திகதி வரை 3 தினங்கள் கண்காட்சி நடத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சேவைகளையும் கண்காட்சி வளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
வர்த்தகம் தொடர்பான ஆலோசனை வழிகாட்டல், பயிற்சி சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படும். கண்காட்சி வளாகம் ஐந்து வலயங்களாக அமைக்கப்படும். கண்காட்சியை பார்வையிட வரும் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு விசேடமாக கல்வி வலயம் அமைக்கப்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் சேவைகளும் கண்காட்சி வளாகத்தில் வழங்கப்படும். விமானங்கள் , ஆயுதங்கள் அடங்கிய முப்படையினரின் கண்காட்சிக் கூடமும் அமைக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.