பாடசாலை கல்வித்தரத்தை உறுதிசெய்வதற்கான கல்வி கண்காணிப்பு சேவை நிறுவனமொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு சேவை நிறுவனத்தை அமைக்க அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி கண்காணிப்பு சேவை எனும் பெயரில சுயாதீன நிறுவனமாக குறித்த நிறுவனம் அமைக்கப்படும். அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார்.
கல்வியமைச்சரின் பரிந்துரையின் கீழ் அமைச்சரவையின் அனுமதியுடன் அனுபவமும் தகைமையும் உடைய ஒருவர் குறித்த பதிவுக்கு நியமிக்கப்படுவார் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.