நேபாளத்தில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேபாளாத்தின் கிழக்கு பகுதியில் சீரற்ற வானிலை நீடிக்கிறது. கடந்த சில வாரங்களாக தொடரும் மழை கொண்ட வானிலையால், அங்கு அதிகளவான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மண்சரிவினால் பலர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சீரற்ற வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 30 மில்லியன் சனத்தொகையை கொண்ட நேபாளாத்தில் வருடந்தோறும் ஜூன் மாதம் முதல் செம்படம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.