பதுலு ஓயாவில் நீராடச் சென்ற பெண்ணொருவர்; நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பதுளை பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த பெண்ணை தேடும் பணிகளை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் இதுவரை குறித்த பெண் கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர. தல்தேன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.