மக்களின் உதவியுடன் அதிகாரத்திற்கு வந்து மாளிகைகளுக்கு சென்றதன் பின்னர் கடந்த அரசாங்கத்தின் நிர்வாகிககள் அம்மக்களை மறந்து விட்டதாக அமைச்சர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார்.
3 உதாகம்மான மாதிரி திட்டங்களின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற 2536, 37 மற்றும் 38 ஆகிய உதாகம்மான மாதிரி கிராமங்களின் நிர்மாணப்பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தங்காலை வித்தாரன்தெனிய, உடுவிலகொட ஆகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்படுகின்ற இம்மாதிரி கிராமங்களுக்கு சூரசவிகம, சத்சவிகம மற்றும் சஹசிறிகம என பெயரிடப்பட்டுள்ளன. இம்மூன்று கிராமங்களிலும் 78 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.