டியூனிஷியாவிற்குரிய புலம்பெயர் வள்ளம் ஒன்றில் 80கும் கூடுதலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வளத்தில் 86 பேர் பயணித்துள்ளதுடன், இவர்களில் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணத்தை ஆரம்பித்த பின்னர் இவ்வள்ளம் கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாண்டில் மனித கடத்தல்களில் குறைவை காணக் கூடியதாக இருந்த போதிலும் கடந்த ஆண்டுகளுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.