தனவந்தர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த காணி உரிமையை சாதாரண மக்களுக்கும் பெற்று கொடுக்க போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இவர்களுக்கும் கௌரவமாக இது தமக்குரிய காணியென சொல்வதற்கும் தமக்கு பின்னால் அதன் உரிமை அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கும் முடியுமென நாவலபிடியில் இடம்பெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாவலபிடி பகுதியில் மக்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு திடலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இதன்போது 1200 காணி உறுதிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன, ஐக்கிய தேசிய கட்சி நாவலபிட்டி பதில் அமைப்பாளரும் நகர பிதாவுமான சசங்க சஞ்சீவ சம்பத் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.