லெபனானில் தஞ்சமடைந்திருந்த சிரியா அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். சிரியா இராணுவத்தினர் பயங்கரவாதிகளை ஒழித்து பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர். இதனால் சிரியா அகதிகள் தமது சொந்த இடங்களில் மீள குடியேறுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் லெபனானிலிருந்து சிரியா மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.