முல்லைத்தீவில் நேற்றைய தினம் வீசிய மழையுடன் கூடிய காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.