பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தன்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்க தயாரென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்துள்ளார்.
வில்பத்து பகுதியில் தனக்கு 8 ஆயிரம் ஏக்கர் காணி இருப்பதாக எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அதை அவர் நிரூபிக்கவேண்டும். இல்லையெனில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்க தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதூர்தீன் சவால் விடுத்துள்ளார்.