மாணிக்க கற்களின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பாக தொழில் முயற்சியாளர்களை அறிவுறுத்தும் தொழிநுட்ப செயற்பட்டறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தலைமையில் மகாவலி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின மாணிக்க கல் மற்றும் தங்க ஆபாரண ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இதனை ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையில் மாணிக்க கல் மற்றும் தங்க ஆபாரண உற்பத்தியின் சிறந்த முகாமைத்துவம் புத்தாக்கம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான பிரச்சினைகள் தீர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டது.