கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 274 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் பொலிஸாரினால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைவாக இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிவரை இதுவரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 2 ஆயிரத்து 37 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் குறித்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த பொலிஸார் எதிர்வரும் 5ம் திகதி வரை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தனர்.