கிழக்கு மாகாண கடற்படையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைவிதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.