ருஹூனு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 10 மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலேயே இவர்கள் இவ்வாறு காயமடைந்தனர்.
இம்மோதலில் 10 மாணவர்களும் கல்விசாரா ஊழியர்கள் இருவரும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ருஹூனு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஜீவ அமரசேன தெரிவித்து:ள்ளார்.