அமெரிக்காவில் பெய்து வரும் கன மழை காரணமாக வொஷின்டன் தலைநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வெள்ளை மாளிகை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆளின்டன், வேர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு 127 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.
இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதனால் நகரின் சில பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. சுரங்க புகையிரத பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.