உலகளாவிய ரீதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதிகரித்துள்ள உஷ்ணத்துடன் கூடிய நிலைமையே இதற்கு காரணமாகும். அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் எலஸ்கா பனிப்பாறையினை விசேட ஆய்வுக்குட்படுத்தினர். குறித்த பனிப்பாறை உருகும் வேகம் இதற்கு முன்னிருந்ததை விட அதி வேகமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.