சீன அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள P625 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலை உத்தியோகப்பூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி சீனாவின் செங்ஹாயில் உள்ள கடற்படை பிரிவில் இடம்பெற்றது. இலங்கை கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி றியர் எட்மிரல் நிசாந்த உலுகே தென்னவின் தலைமையிலான குழுவினர் இதில் கலந்துக்கொண்டனர்.
1994ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 112மீற்றர் ஆகும். அகலம் 12.4 மீற்றர் ஆகும். இதன் எடை 2300 தொன்கள் ஆகும். இதில் 18 அதிகாரிகள் உள்ளடங்களாக 110 பேரைக் கொண்ட பணியாளர் சபையும் கடமையில் ஈடுப்படமுடியும்.
இலங்கை கடற்படை கப்பல் குழுவில் இணைந்துக் கொண்ட பின்னர் இலங்கைக்கு உட்பட்ட ஆழ்கடல் வலயத்துக்குள் தேடுதல் மீட்டெடுத்தல் போன்ற பணிகள் கடல் வளங்களை பாதுகாத்தல் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் மற்றும் வள்ளங்களுக்கு உதவிகளை வழங்குவது ஆகியவற்றுக்காக இந்த கப்பலை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.