இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்கிறது.
புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘டைம்ஸ்’ நாளிதழ் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. குறித்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
இதில், போரிஸ் ஜான்சனுக்கு 74 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 26 சதவீதம்பேர் மட்டுமே ஜெராமி ஹண்டுக்கு ஆதரவாளித்துள்ளனர். இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமராக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.