இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் Joanne Doornewaard கடந்த வெள்ளியன்று கொழும்பு மாநகர சபையின் மேயரான ரோஸி சேனநாயக்காவின் அழைப்பின் பேரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். எதிர்வரும் 14 ஆம் திகதி (Carfree Sunday) கார்களற்ற ஞாயிறு நிகழ்வு செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கு நெதர்லாந்து தூதுவர் அழைக்கப்பட்டார். இதற்காக அவர் சைக்கிளில் கொழும்பு மாநகர சபைக்கு வருகை தந்தார்.