தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 4 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கின் வாதிக்கு 250,000 ரூபாய் நஷ்ட ஈட்டு பணம் வழங்குமாறும், தவறினால் மேலதிக 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்படுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டில் காணிச் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காகவே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.