நாட்டுகாக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் மொனராகலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் இன்றும் இடம்பெறுகின்றன. 5ம் கட்டத்தின் 5ம் நாள் நிகழ்வுகள் இன்று மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோருக்கு நன்மை பயக்கும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது விசேட பிரதிநிதி இந்திக்க துஷார தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேட சிறுநீரக நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி இவர்களுக்கான தெளிவுபடுத்தல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகிறது.
இன்று நாள் முழுவதும் கிராம சக்தி, பிள்ளைகளை பாதுகாப்போம், ஸ்மார்ட் ஸ்ரீலங்கா, போதைப்பொருள் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, சுற்றாடலை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிரதிநிதி தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறும் நாட்டுக்கானக ஒன்றிணைவோம் வேலைத்திடடத்தின் இறுதி நாள் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிபில பொது விளையாட்டரங்கில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.