அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இணைவாக வொசிங்டனில் பாரிய இராணுவ கண்காட்சியொன்று இடம்பெற்றது. வொசிங்கடன் நகரின் ஆப்ரஹாம் லிங்கன் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இக்காண்காடசி இடம்பெற்றது. தாக்குதல் ஜெட் விமானங்களின் சாகசங்களும் இடம்பெற்றன.
இவ்வாறான கண்காட்சியொன்று அமெரிக்காவில் நடைபெறுவது பிரான்சின் பெஸ்டியல் தின கண்காட்சியை ஒத்ததாகுமென ஒருசில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இக்கண்காட்சிக்கென 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இதேவேளை வெள்ளை மாளிகைக்கு முன்னார் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை எரித்து மோதல் நிiயொன்றை ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.