முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வங்கி கணக்கொன்றில் சந்தேகத்திற்கு இடமாக ஐந்து கோடி 50 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பணம் இருப்பதாக விசாரிப்பதாக இரகசிய பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு ஏற்ப இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக இரகசிய பொலிசார் கொழும்பு நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
ரிஷாட் பதியுதீனின் மனைவியின் தேசிய அடையாள அட்டை மற்றும் இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி அவர் பணிப்பாளராக பணிப்புரியும் கம்பனிகள் கொழும்பு பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக அறிக்கையொன்றை பெற்று தருமாறு குறித்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இரகசிய பொலிசார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.நீதிபதி அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த பெண்ணுக்கு இரண்டு முகவரிகளில் இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் இருப்பதாக இரகசிய பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.