இந்தியாவின் மும்பை நகரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்தோரின் தொகை 35 ஆக அதிகரித்துள்ளது.
இவ் வெள்ளத்தினால் இந்தியாவில் நிதி நகரமாக கருதப்படும் மும்பை நகரத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுளளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த அடை மழையினால் கடந்த 24 மணித்தியாலத’தில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிறு முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை மேலும் தொடரும் என இந்திய வளிமண்டலவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் மும்பை விமான நிலையத்தின் விமான பயணங்களும் இரத்து செய்ய்ப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.