பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் இப்பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போது, பிரபல தொலைகாட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கினார். இதன்போது அந்த நேர்காணல் ஆரம்பமாகி ஐந்து நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் வேறு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதற்கான முறையான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவும் இல்லை. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் கடுமையான ஊடக அடக்குமுறையை கடைப்பிடிப்பதாக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.