மாலம்பே முதல் கொழும்பு கோட்டை வரையிலான இலகுரயில் சேவை வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 16 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்ட குறித்த இலகு ரயில் வீதியில் 16 தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.