ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரித்தானிய ஆட்சியிலிருந்து சீன அரசாங்கத்திடம் ஹொங்கொங்கின் ஆட்சிப்பொறுப்பு கையளிக்கப்பட்டதன் 22 வருட பூர்த்தியை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹொங்கொங் நகர பிரதானி கெரி லேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் மிளகு தாக்குதல் நடத்தியுள்ளனர். மில்லியன் கணக்கானோர் கடந்த சில வாரங்களாக ஹொங்கொங்கில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டத்தை சீன அறிமுகப்படுத்தியதையடுத்தே ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி தண்டனை வழங்கும் வகையில் குறித்த சட்டம் அமைந்துள்ளது.