அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று வருகைதந்துள்ளார்.
பாடசாலை பாடப்புத்தகங்களில் அமைச்சரின் புகைப்படத்தை அச்சிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். தற்போது அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.