அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெறும் ஜி-20 அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக இச்சந்திப்பு இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வர்த்தக போர் நிலவியது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப சீனாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தயாரென தெரிவித்தார். அவ்வொப்பந்தம் இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார். இதன் போது கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி ஷிஜின்பிங் ஒருவருக்கு ஒருவருக்கு எதிராக வரியை அதிகரித்து வர்த்தக போரை ஏற்படுத்துவதை விட பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் இச்சந்திப்பு பயனுள்ளது என தெரிவித்தார்.