செல்பி புகைப்படம் எடுக்கும் போது இடம்பெறும் மரணங்கள் உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளதாக புதிய கணிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2011 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து 2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 259 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகளவான உயிரிழப்புக்கள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளன. நவீன ரக செல்பி ஸ்டிக்களை பயன்படுத்தி செல்பி புகைப்படங்களை எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது. செல்பி புகைப்படம் எடுக்க பெண்களே அதிகளவில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆபத்தான இடங்களில் செல்பி புகைப்படமெடுப்பது வீர செயலென இளைஞர்களும் யுவதிகளும் கருதுகின்றனர். இதன் காரணமாகவே செல்பி புகைப்படம் எடுக்கும் போது பதிவாகும் மரணங்கள் அதிகரித்துள்ளன. குறித்த நிலை மேலும் மோசமடையலாமென சர்வதேச கணிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.