நைஜீரியாவின் பொகோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். கிராமம் ஒன்றிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.