இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக உலகின் பலநாடுகளும் அமைப்புக்களும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக சர்வதேச ரீதியில் மகஜர் ஒன்றில் கையொப்பம் இடபோவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது.
43 வருடங்களாக மரண தண்டனை அமுல்படுத்தப்படுத்தபடாத நாடாக இலங்கை காணப்பட்டது. சர்வதேச ரீதியில் பேணப்பட்ட வந்த இந்நாமத்தை திசைத்திருப்புவதற்கு புதிய அமுல்படுத்தலின் மூலம் சந்தர்ப்பம் ஏற்படுமென சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. மரண தண்டனையானது குற்றங்களை தடுப்பதற்கு காரணமாக அமையாது எனவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் அது இலங்கையுடனான புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு தடையாக அமையுமென ஐக்கிய குடியரசு தெரிவிக்கின்றது. பயங்கரவாததத்தை ஒழித்தல் உள்ளிட்ட சட்டத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுவது சிரமமாக அமையும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பங்களிப்பு குறித்தும் மீண்டும் ஒருமுறை இதன்மூலம் சிந்திக்க வேண்டி ஏற்படுமெனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதனால் மரண தண்டனையற்ற இலங்கையாக இதுவரை பின்பற்றப்பட்டு வந்த முறைகளை அமுல்படுத்துமாறும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மரண தண்டனையை அமுல்படுத்தாமல் இருக்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை ஆரவாக வாக்களித்ததாகவும் அவர்கள் நினைவுப்படுத்தியுள்ளனர்.
மரண தண்டனை அமுல்படுத்தப்பட்;டால் அது 73வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறுவதாக அமையும் என ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய சங்கம் அத்தண்டனையை அமுல்படுத்தினால் சர்வதேசத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் நாட்டின் பங்காளிகளுக்கும் பிழையான தகவல்களை எடுத்துச்செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்கியுள்ள ஐரோப்பிய சங்கம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை பிரகடனம் உள்ளிட்ட கொள்கைகளை பின்பற்ற வேண்டியேற்படும் என்பது குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியேற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் மரண தண்டனைக்கு எதிராக செயற்படுகின்ற இலங்கையை போன்று சர்வதேச அமைப்புக்களுடன் தாமும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை தடுப்பதற்கு மரண தண்டனை காரணமாக அமையாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலும் பல நாடுகளும் உலக முன்னணி வர்த்தகரான ரிச்சர் பிரன்ஸன் போன்றவர்களும் பல்வேறு அமைப்புக்களும் மரண தண்டனைக்கு எதிராக அறிக்கைககளை வெளியிட்டுள்ளனர்.