இமதுவ ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை வலய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கல்கடஸ் வகை துப்பாக்கியொன்றும், துப்பாக்கியின் பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவரென தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.