கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு அமுலாகும். அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.