கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இராணுவ கவச வாகனமொன்று புகையிரதத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் இராணுவ வாகனம் மோதியுள்ளது.