சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் இலுப்பக்கடவாய் பகுதியில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இதுகுறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரக்குற்றிகளை கடத்திச்சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவரை கைதுசெய்தனர். இதன்போது பெறுமதி மிக்க மரங்களின் குற்றிகளும் கைப்பற்றப்பட்டன. இலுப்பக்கடவாய் வனப்பகுதியில் ரகசியமான முறையில் இவை வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரை மன்னார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.