அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் அதிருப்தியடைந்துள்ள ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. அணுவாயுத தடை ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலைமை மோசமடைந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். இறுதிக்கட்டத்தில் இம்முடிவு மீளப்பெறப்பட்டது. இந்நிலையில் ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அமெரிக்காவின் மிரட்டும் போக்கு தொடரும் பட்சத்தில் அவர்களுடனான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லையென ஈரானின் ஐ.நா தூதுவர் தெரிவித்துள்ளார்.