சியம்பலாண்டுவ மடுகம பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் தமது தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்த போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மழையுடன் கூடிய காலநிலையின் போது ஏற்படும் இடி, மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.