உலக கிண்ண கிரிக்கட் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் அணி 19 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. இத்தோல்வியின் மூலம் உலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்துள்ளது.
உலக கிண்ண தொடரின் முப்பதாவது லீக் போட்டி லண்டனிலுள்ள லோக்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்க தீர்மானித்தது. இதன் பிரகாரம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் சொஹல் அதிகபட்சமாக 89 ஓட்டங்களை குவித்தார். தென்னாபிரிக்கா சார்பில் லுங்கி என்கிடி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். வெற்றி பெறுவதற்கு 309 ஓட்டங்கள் பெறவேண்டி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது. தென்னாபிரிக்க அணி தலைவர் டு பிளஸிஸ் அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பாகிஸ்தான் சார்பில் வஹாப் ரியாஸ் மற்றும் சதாப்கான் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர் இவ்வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 7 வது இடத்திற்கு முன்னேறியது.