ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உட்கொண்டுள்ளன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் சடலங்களை உண்பது வழக்கம். ஆனால், இந்த யானைகளின் சடலங்களை உட்கொண்ட கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதற்கான காரணம் குறித்த வனவளத் துறை அதிகாரியொருவர் விளக்கமளிக்கையில் இந்த யானைகளின் உடல்களில் நச்சு தன்மை கலந்திருக்கலாம் என கூறியுள்ளார். இறந்த கழுகுகளுள் 468 கழுகுகள் வெள்ளை நிறம் கொண்ட கழுகுகள் ஆகும். இந்த கழுகுகள் மிக மோசமான, ஆபத்து ஏற்படுத்தும் பறவை இனங்களில் ஒன்றாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறந்த யானைகளின் சடலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அந்நாட்டு வனவளத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.