உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.தேசிய பாதுகாப்பு குழு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று கூடியது. பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படடவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கினார். பயங்கரவாதத்துடன் தொடர்புப்படாத சகலரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துளள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. சமய வைபவங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.