தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.