ரயில்வே தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருவதாக அவர்களுக்கு உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் அவர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிட்டு நாளைய பேச்சுவார்த்தைக்கு சமூகமளிப்பார்களென எதிர்பார்ப்பதாக அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.
அவர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிடாவிடில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தை இடம்பெறாதென இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். மக்கள் பாதிப்படையும் வகையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள கூடாதென இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.