மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. ட்ரக்டர் வாகனமொன்றும் வேனொன்றும் ஒன்றோடொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.